இத்தாலியில் இலங்கையர்களுக்கு பல தொழில் வாய்ப்பு!

Date:

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் மற்றும் இலங்கை என்பவற்றின் பணியாளர்களை இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இணைத்து கொள்வதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

இணையத்தளம் ஊடாக இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 87,702 தொழிலுக்கான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

கனரக வாகன சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில் தொழில்வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இத்தாலிய அரசாங்கத்தின் பின்வரும் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

http://www.gazzettaufficiale.it/eli/id/2023/01/26/23A00232/sg

இதேவேளை விண்ணப்பதாரர்கள் இந்த வேலை வாய்ப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
இந்த வேலைத்திட்டத்தின்படி எவருக்கும் இத்தாலியில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு பணம் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், அவரின் தனிப்பட்ட தலையீட்டின் மூலம் இந்த வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

மார்ச் 27, காலை 9:00 மணி முதல் https://www.anpal.gov.it/assumere-lavoratori-non-comunitari-anno-2023 என்ற இணையதளத்திற்குச் சென்று இந்தப் பணிகளுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...