இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் முட்டை கையிருப்புக்கு முழுப்பொறுப்பேற்பதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவும் பிரதேசத்தில் இருந்து இந்த நாட்டுக்கு முட்டைகள் கையிருப்பு அனுப்பப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைக் கையிருப்புகளுக்குத் தேவையான அனைத்து தரச் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு முட்டைகளை கொண்டு வந்த பின்னர், சந்தைக்கு வெளியிடும் போது இது தொடர்பான அனைத்து தரச் சான்றிதழ்களையும் முன்வைப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.