இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பரிசோதிக்க நடவடிக்கை

Date:

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள் ஆய்வகங்களில் பரிசோதிக்க அனுப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ்களைக் கண்டறிவதற்காக இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக பணிப்பாளரும் வைத்தியருமான ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இந்த சோதனைகள் பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் நான்கு நாட்களுக்குள் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அறிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாவிட்டால், கையிருப்பு முட்டைகளை சந்தைக்கு வெளியிட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் முட்டை விலைக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...