இந்தோனேஷியாவில் தொடர் மழை: நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!

Date:

இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் அதன் தலைநகரான ஜகார்த்தா அருகே உள்ள போகோர் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேரை காணாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகின்றது.

இதனால் அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதில் பலர் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனர். மேலும் பல மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணி மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...