இலங்கைக்கான நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தது!

Date:

இலங்கையின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க  உறுதிப்படுத்தினார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பங்காளிகளின் ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“இலங்கைக்கு  7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் திட்டத்திற்கு IMF நிறைவேற்று  சபை ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குநர்களுடனான அனைத்து விவாதங்களிலும் முழு வெளிப்படைத்தன்மை மற்றும் நிலையான நிலையை அடைவதற்கு ஜனாதிபதி உறுதியளித்தார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...