ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: புலஸ்தினி மகேந்திரன் உயிரிழப்பு

Date:

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி வீடொன்றிற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மத்தியில், சாரா ஜஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் அடங்குகின்றமை டி.என்.ஏ பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் புலஸ்தினி மகேந்திரனும் உயிரிழந்துள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புலஸ்தினி மகேந்திரனின் தாயாரிடமிருந்து பெற்றுக்கொண்ட டி.என்.ஏ மாதிரிகளின் ஊடாக, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...