ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: புலஸ்தினி மகேந்திரன் உயிரிழப்பு

Date:

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி வீடொன்றிற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மத்தியில், சாரா ஜஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் அடங்குகின்றமை டி.என்.ஏ பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் புலஸ்தினி மகேந்திரனும் உயிரிழந்துள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புலஸ்தினி மகேந்திரனின் தாயாரிடமிருந்து பெற்றுக்கொண்ட டி.என்.ஏ மாதிரிகளின் ஊடாக, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...