உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 7ஆம் திகதி!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில், அவர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நிதியமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்து எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...