எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு!

Date:

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று (29) காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் மேலும் ஆதரவளிப்பார்கள் என அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு, ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை ஓடர் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆர்டர்களை பெற்று குறைந்தபட்ச இருப்புக்களை பேணுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...