அடுத்த மாதம் எரிபொருள் விலை கணிசமான அளவு குறையும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாவின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.