ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி இல்லை: இந்திய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

Date:

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது,

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்புக்கு இணையாக தன்பாலினத் திருமணங்களை பொருத்திப் பார்க்க முடியாது.

தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிக்காததால், எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் கீழ், ஒரே பாலினத் திருமணங்கள் குற்றமற்றவை என அறிவிக்கப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் அடிப்படை உரிமையை மனுதாரர்கள் கோர முடியாது.

இந்துக்கள் திருமணத்தை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரஸ்பர கடமைகளை நிறைவேற்றுவதற்கான புனிதமான உடன்படிக்கையாக கருதுகின்றனர், அதே சமயம் முஸ்லிம்கள் திருமணத்தை உயிரியல் ஆணுக்கும் உயிரியல் பெண்ணுக்கும் இடையிலான ஒப்பந்தமாக கருதுகின்றனர்.

எனவே, மதம் மற்றும் சமூக நெறிமுறைகளில் நிறுவப்பட்ட நாட்டின் முழு சட்டமன்றக் கொள்கையையும் மாற்றுவதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றத்திடம் கோருவது அனுமதிக்கப்படாது என்று இந்திய அரசு வலியுறுத்தியது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...