குவைட் நாட்டின் நிதியுதவியில் குருநாகல் அல் ஹிக்மா வித்தியாலயத்திற்கு புதிய கட்டடம்!

Date:

குருநாகல் மாவட்டத்தின் தித்தவல்கஹவல ஹிரிபிடியவில் அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா  அண்மையில் பாடசாலை அதிபர் மஸாஹிம் தலைமையில் இடம்பெற்றது.
அல்- ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ. நூருல்லா B.A (நளீமி) அவர்களின் முயற்சியில் குவைட் நாட்டின் ISLAMIC CARE SOCIETY இன் நிதியுதவியுடன் பாத்திமா அப்துல் வஹாப் அர்ரிபாயி அவர்களின் ஞாபகார்த்தமாக இக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகமது  (நளீமி) -பணிப்பாளர் ஜாமிய்யாஹ் நளீமியா விசேட அதிதிகளாக இலங்கைக்கான குவைத் தூதுவரின் விஷேட பிரதிநிதி அஷ்ஷெய்க் எம்.எம் பிர்தவ்ஸ் (நளீமி) அல்- ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ.நூருல்லா B.A (நளீமி)
அதன் தலைவர் அல் ஹாஜ் ஆர்.எம்.அமீனுதீன்  பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பண்டார, மற்றும் அதிபர்,ஆசிரியர்கள், பழய மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...