சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு அதிகரிக்கக் கூடும்!

Date:

இறக்குமதி மூலம் சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு அதிகரிக்கக் கூடும் என  அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை அந்த தொகைக்கு சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள் தாய் கோழிகளை முட்டை உற்பத்திக்காக பயன்படுத்தாது இறைச்சிக்காக விற்பனை செய்யும் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதன் காரணமாக முட்டைக்கான தட்டுப்பாடு வலுவடையக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் மேலும் ஒரு தொகுதி முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அரச வணிக பல்சார் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி 10 மில்லியன் முட்டைக்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...