சவூதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு!

Date:

இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான உலருணவுப் பொதிகள் சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இந்த உலருணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானி தலைமையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் நேற்றையதினம் (28)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம் பைசல் மற்றும் உதவிப் பணிப்பாளர் எம.எல்.எம். அன்வர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
இதேவேளை, இந்த நன்கொடைத் திட்டமானது சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் ஊடாக தகுதியான மக்களுக்கு இந்த உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸினால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...