சவூதி உள்ளிட்ட 4 நாடுகள் இலங்கை கடன்களை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டுள்ளன: வெளிவிவகார அமைச்சர்

Date:

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க நான்கு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இலங்கையின் சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி உத்தரவாதம் வழங்கியுள்ளதாக அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடந்து வரும் இக்கட்டான காலங்களில் நாட்டுக்கு ஆதரவளித்த சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்கிய பரிஸ் கிளப் மற்றும் சீனாவுக்கு   மீண்டும் ஒருமுறை  நன்றி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...