இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க நான்கு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இலங்கையின் சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி உத்தரவாதம் வழங்கியுள்ளதாக அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடந்து வரும் இக்கட்டான காலங்களில் நாட்டுக்கு ஆதரவளித்த சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்கிய பரிஸ் கிளப் மற்றும் சீனாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you 🙏
Saudi Arabia 🇸🇦, Pakistan 🇵🇰, Hungary 🇭🇺 and Kuwait 🇰🇼 for standing with Sri Lanka 🇱🇰 at these testing times and providing debt restructuring assurances to IMF.
Generations of Sri Lankans will always cherish your friendship and support.
🇱🇰Can, 🇱🇰Will!— M U M Ali Sabry (@alisabrypc) March 14, 2023