தாய்வான் எல்லையில் போர் பதற்றம் : 25 போர் விமானங்களை அனுப்பிய சீனா!

Date:

1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது.

இந்த சூழலில் சமீபகாலமாக தாய்வானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகின்றது. சீனாவுக்கு கடும் கோபத்தை அமெரிக்கா ஏற்படுத்தி வருகின்றது.

இதனால், தேவை ஏற்பட்டால் தாய்வான் மீது படையெடுத்து அதனை ஆக்கிரமிப்போம் என சீனா மிரட்டி வருகின்றது.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே இருநாடுகளுக்கும் இடையே கடுமையான போர்ப்பதற்றம் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில் தாய்வானை மிரட்டும் விதமாக சீனா நேற்று 25 போர் விமானங்களை தாய்வான் எல்லைக்குள் அனுப்பியது.

இது குறித்து தாய்வான் இராணுவ அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,

‘இன்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்குள் சீன இராணுவத்துக்கு சொந்தமான குண்டுவீச்சு விமானங்கள் உள்பட 25 போர் விமானங்கள் தைவானுக்குள் அத்துமீறி ஊடுருவின.

மேலும் 3 போர்க்கப்பல்களும் தைவானின் நீர்பரப்புக்குள் நுழைந்தன.

அதை தொடர்ந்து நிலைமையை கண்காணிக்க தாய்வான் இராணுவம் போர் விமானங்களையும், போர் கப்பல்களையும் அனுப்பி வைத்தது’ என கூறப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த அடாவடியால் இருநாடுகளுக்கு இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...