துருக்கியின் அணுமின் நிலைய திறப்பு விழாவில் புட்டின் கலந்து கொள்ளும் சாத்தியம்!

Date:

தென்கிழக்கு துருக்கிய மாகாணமான மெர்சினில் அமைந்துள்ள முதல் அணுமின் நிலைய திறப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் 27 அன்று துருக்கிக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி புடின் மெர்சினுக்கு நேரில் செல்லலாம் அல்லது தொலைதொடர்பு மூலம் விழாவில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு துருக்கிய மாகாணமான மெர்சினில் அமைந்துள்ள இந்த திட்டம் துருக்கியின் முதல் அணுமின் நிலையமாகும்.

இது ஆண்டுதோறும் 35 பில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மற்றும் உள்நாட்டு மின்சாரத் தேவையில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உலகின் முதல் அணுமின் நிலையத் திட்டமானது, சொந்தமாக இயக்கும் மாதிரி மூலம் செயல்படுத்தப்பட்டது.

ஒரு ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யாவின் Rosatom  நிறுவனம் மின் உற்பத்தி நிலையத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு, செயல்பாடு மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அதேநேரம் ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இணைந்து கட்டப்பட்ட நாட்டின் முதல் அணுமின் திட்டமாகும்.

இதேவேளை இந்த அணுமின் நிலையம் துருக்கியின் ‘இன்றியமையாத முதலீடுகளில்’ ஒன்று எனவும் இந்த வசதி நாட்டிற்கு ‘தீவிரமாக ஆற்றலைச் சேமிக்க’ உதவும் எனவும் துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

4,800 மெகாவாட் மற்றும் நான்கு அணுஉலைகள் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த ஆலை இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியை தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...