துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது!

Date:

எட்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் இன்று(08) மற்றும் நாளை(09) ஆகிய தினங்களில் முதல் தடவையாகக் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் எட்டுக்குமான தலைவர்கள் முதலாவது கூட்டத்தில் நியமிக்கப்படவிருப்பதுடன், இதில் நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் ஆளும் கட்சியிலிருந்தும், நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் எதிர்க்கட்சியிலிருந்தும் நியமிக்கப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பதினேழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் சபையில் அறிவித்திருந்ததுடன், இதில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எட்டுக் குழுக்களே இன்று மற்றும் நாளை கூடவுள்ளன.

1) மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு.

2) நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

3) பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

4) சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

5) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

6) பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

7) பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

8) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வை குழு

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...