தேயிலை விலையில் வீழ்ச்சி!

Date:

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலை தூளின் பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்தால் தேயிலையின் விலை மேலும் வீழ்ச்சியடையும் எனவும், இதனால் தேயிலை கைத்தொழில் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு கிலோ மலையக தேயிலை 1,250 ரூபாவிற்கு கிடைத்ததாகவும், தற்போது 1,050 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு அதிக செலவை சுமக்க வேண்டியுள்ள நிலையில், ஒரு கிலோ தேயிலைக்கு பெறப்படும் தொகை குறைவடைந்துள்ளமையினால் தேயிலை கைத்தொழில் கடும் ஆபத்தில் உள்ளதாக தோட்ட அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...