நாட்டின் இயல்பு நிலை பாதிப்பு: ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு!

Date:

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அரச நிறுவனங்களில் ஊழியர்களின் வருகை குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 10 அலுவலக தொடருந்துகள்  இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரையோரப் பாதையில் நான்கு தொடருந்துகளும்  புத்தளம், களனி மற்றும் பிரதான பாதையில் தலா இரண்டு தொடருந்துகளும்  கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டதாக வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இயங்கிய சில தொடருந்துகளுக்கு  இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டதாக  குறிப்பிடப்படுகின்றது.

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்து விநியோகம் உட்பட மருத்துவ மற்றும் ஆய்வக நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...