நிதி இல்லை என்றாலும் தேர்தலை நடத்த வேண்டும்: பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

Date:

அரசாங்கம் நிதி இல்லை என்று கூறிய போதிலும் இரு மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிதி அமைச்சு தேர்தலுக்கு நிதி வழங்காத நிலையிலும் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடாத சூழலிலும் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக திகதியை அறிவித்தார்.

இருப்பினும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் ஜனாதிபதியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்கள் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டனர்.

இரண்டு மாகாண தேர்தல்களுக்கும் 15 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் தேவை என்று பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலை தடுக்க நிர்வாக, சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நாட்டின் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நாட்டின் பொதுத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது.

Popular

More like this
Related

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...