பங்களாதேஷில் பயங்கர விபத்து: பேருந்து கவிழ்ந்து 19 பேர் பலி!

Date:

பங்களாதேஷில் வேகமாகச் சென்ற பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் காயமடைந்தனர்.

பங்களாதேஷ் மாநிலம் டாக்காவை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று , மதரிபூரில் உள்ள ஒரு விரைவுச் சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் எனவும் அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்கள்.  மேலும், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் அவர்கள் தெரிவித்தனர்.

மோசமான பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் காரணமாக பங்களாதேஷில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.பங்களாதேஷில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 9,951 பேர் உயிரிழந்துள்ளனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...