பசுமைப் பொருளாதாரத்தில் பிரவேசித்த பிராந்தியத்தில் முதலாவது நாடாக இலங்கையை உருவாக்க திட்டம்: ஜனாதிபதி

Date:

பசுமை பொருளாதாரத்திற்குள் நுழையும் வலயத்தின் முதலாவது நாடாக இலங்கை விளங்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இயற்கை சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த முதலீட்டாளர்களுடன் நேற்று(27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான பசுமைப் பொருளாதாரக் கொள்கை எதிர்வரும் இரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடன் மறுசீரமைப்பு மற்றும் பசுமை ஆற்றலில் கவனம் செலுத்துதல் ஆகிய இரண்டு பிரதான பிரச்சினைகள் இலங்கைக்கு அவசியமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...