‘பஸ் உதிரி பாகங்களின் விலைக் குறைப்பு தொடர்பில் ஆராய முடியாவிட்டால், போக்குவரத்து அமைச்சர் பதவி விலக வேண்டும்’

Date:

 பஸ் உதிரி பாகங்களின் விலைக் குறைப்பு மற்றும் சேவைக் கட்டணங்களை ஆராய முடியாவிட்டால், போக்குவரத்து அமைச்சர்  பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.

அதேநேரம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் தனியான குழுவொன்றை நியமிக்கவோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் (NTC) கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவோ முடியாவிட்டால், அவர் பதவி விலக வேண்டும் எனவும், பிரச்சினைகளை கவனிக்க வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் 1 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தத்திற்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருளின் விலையில் பெரும் வீழ்ச்சியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பரிசீலித்து வருவதாகவும், இந்த கோரிக்கை குறித்து மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், பஸ் கட்டணத்தை குறைப்பதன் மூலம் அந்த நன்மையை மக்களுக்கும் வழங்க முடியும்.

அமெரிக்க டொலரின் மதிப்பு குறைவது, உதிரி பாகங்களின் விலையை நேரடியாக பாதிக்கும். ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் திகதி பஸ் கட்டண திருத்தம் நடைபெறும்.

ஆனால் ஏப்ரல் 1 ஆம் திகதி எரிபொருள் விலை குறையும் பட்சத்தில் மக்களுக்கான பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...