புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற இருப்பவர்களுக்கான அறிவித்தல்- 2023 (ஹிஜ்ரி 1444)!

Date:

சவூதி அரேபிய அரசாங்கம் இவ்வருடம் இலங்கையிலிருந்து 3500 யாத்திரிகர்கள் ஹஜ் பனித யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 2019ம் ஆண்டிலிருந்து புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக ஏற்கனவே திணைக்களத்தில் மீளப்பெற்றுக்கொள்ளும் தொகையாக ரூபா 25000.00ஐ செலுத்தி உறுதிசெய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் தீர்மானித்துள்ளன.

இவ்வருடம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக எண்ணம் (நிய்யத்து) கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இணைய தளத்தினூடாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் மீளப்பெற்றுக்கொள்ளும் தொகையாக ரூபா 25000.00ஐ இலங்கை வங்கி கணக்கிலக்கம் 2327593 (Hajj Account) இல் வைப்புச் செய்து வங்கயின் பற்றுச் சீட்டின் மூலப் பிரதியை திணைக்களத்திற்கு நேரடியாக சமர்பித்து அல்லது நேரிலோ வந்து திணைக்களத்தில் வைப்புச் செய்து பற்றுச் சீட்டினைப்பெற்றுக் கொண்டு ஹஜ் பிரயாணத்தை உடனடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவு பற்றுச் சீட்டின் இலக்க முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இஸட்.ஏ.எம். பைஸல்,
பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...