பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொஹில தண்டின் நுகர்வு அதிகரிப்பு!

Date:

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையில் கொஹில தண்டின் நுகர்வு சுமார் 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரியவந்துள்ளது.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராய்ச்சி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது

கடந்த 2021 செப்டெம்பர் முதல் 2022 இறுதி வரை, நாட்டில் உணவுப் பணவீக்கம் சுமார் 95 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்தக் காலப்பகுதியில் வீட்டு பாவனைக்காக காய்கறிகளின் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், கொஹில தண்டின் நுகர்வு 45 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் அதனுடன் ஒப்பிடுகையில், போஞ்சி நுகர்வு 30 சதவீதமும், கரட் 29 சதவீதமும், பூசணி 27 சதவீதமும், கத்தரிக்காய் 27 சதவீதமும், பச்சை காய்கறிகளின் நுகர்வு 10 சதவீதமும் குறைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...