மகளிர் தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட வேண்டுகோள்!

Date:

பெண்களுக்கு சம உரிமை வழங்குதல் நாடாளுமன்றிலிருந்து ஆரம்பமாகட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமானது, பெண்களுக்கான சமத்துவத்தை நாடாளுமன்றிலிருந்தே ஆரம்பிப்போம் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை பெண்களின் வலுவூட்டல் மற்றும் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் கொள்கை கட்டமைப்பொன்று இன்று வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறப்புரிமை மீறல்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...