மக்கள் மத்தியில் அவமானப்படுத்தப்பட்ட அமைச்சர்கள்!

Date:

குருநாகல், பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவரை அப்பகுதி மக்கள் சிலர் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் ஆகியோர் பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு அங்கிருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கேலி கிண்டல் செய்தும் அவமானப்படுத்தியுள்ளனர்.

எனினும் எதிர்ப்பையும் மீறி அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இந்த கலாசார நிலையத்தை பல அமைச்சர்கள் பல தடவைகள் திறந்து வைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...