மார்ச் மாதத்தில் 53,000 சுற்றுலாப் பயணிகள் வருகை!

Date:

மார்ச் மாதத்தில் இதுவரை 53,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 53 ஆயிரத்து 838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளே அதிகம் என்றும் குறிப்பாக 12 ஆயிரத்து 762 ரஷ்ய பிரஜைகள் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளையும், ஜேர்மனியில் இருந்து 4,289 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,937 பேரும், அமெரிக்காவிலிருந்து 2,716 பேரும் இலங்கை வந்துள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் மொத்தமாக 264,022 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...