முதல் முறையாக உக்ரைன் போரில் களமிறங்கவுள்ள பெண் சிறைக் கைதிகள்!

Date:

ஆண் இராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த வாரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததையடுத்து ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கி ஓராண்டை கடந்து இருக்கும் நிலையில், இந்த தாமதம் ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஒரு பக்கம் இராணுவ வீரர்களின் அதிகப்படியான உயிரிழப்புகள், மறு பக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் ஆயுத பற்றாக்குறை போன்றவை ரஷ்யாவை தொடர்ந்து நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது.

இதற்கிடையில் இராணுவ வீரர்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய சிறைக் கைதிகளை போர் களத்தின் முன்வரிசைக்கு அனுப்பி வருகிறார்.

இவ்வாறு போரில் களமிறங்குவதற்காக அவர்களின் சிறைத் தண்டனை குறைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் முனைக்கு அனுப்பப்படும் பெண் கைதிகளை ரஷ்ய வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக வழங்கல் துறையின் பணிகளுக்கு பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல்வேறு கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்ற கைதிகளை உக்ரைன் போர் முனைக்கு அனுப்ப ரஷ்ய அரசாங்கம் முடிவு செய்தது.

இதன்படி, போர் முனைக்கு செல்லும் கைதிகளின் சிறைத்தண்டனை இடைநிறுத்தப்பட்டு 06 மாத சேவையின் பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...