மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜி ஜின்பிங்!

Date:

சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றார் .

தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக அவருக்கு வாக்களித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும், ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சீன பாராளுமன்றத்தின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை ஜனாதிபதியாக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர் வெற்றிகளுடன், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் மாறி வருகிறார்.

இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்ற வரம்பை கடந்த 2018-ம் ஆண்டு ஜி ஜின்பிங் நீக்கி இருந்தார். இதன் அடிப்படையில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு...

ரணிலின் விளக்கமறியல்: நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்...

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில்...

நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23...