ரயிலில் கைவிடப்பட குழந்தை: தாய், தந்தைக்கு 17 வரை விளக்கமறியல்நீடிப்பு!

Date:

ரயிலில் கழிப்பறையில் குழந்தையொன்று கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட் அக்குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் எதிர்வரும் 17 வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த 11ஆம் திகதி, கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருந்த மீனகயா ரயில் கழிப்பறையில் கைவிடப்பட்டிருந்த குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் பண்டாரவளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரெனவும், தந்தை கொஸ்லந்தை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவரெனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர்கள் சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ளாதவர்கள் என்றும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிவானின் உத்தரவுக்கமைய இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...