வரி செலுத்தத் தவறிய நபர்களை கண்டுபிடிக்க வலை வீச்சு!

Date:

வருமானத்தைக் காட்டாமல் வரி செலுத்தத் தவறிய சில தொழில்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுடன் நிதியமைச்சில் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது, ​​பொது வருவாயில் அதிக கவனம் செலுத்தப்படும் போது, ​​வரி விதிப்பு, வருவாய் வசூல் மற்றும் வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் கவனம் செலுத்த வேண்டும்.

வரி வருவாய் அறவீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் சியம்பலாபிட்டிய, உள்நாட்டு இறைவரி திணைக்கள மட்டத்தில் உரிய நபர்களைக் கையாள்வதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் முறைமையொன்றைத் தயாரிக்குமாறு பணிப்புரை வழங்கினார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...