வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு நிதி இல்லை: அரச அச்சகர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு!

Date:

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி இதுவரையிலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அரசாங்க அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

அத்தோடு, தற்போது வரை அச்சிடப்பட்டுள்ள தபால்மூல சீட்டுகளையும் வழங்க முடியாதுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு பாதுகாப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

எனினும், அவற்றைக் கட்டுகளாக தயார் செய்து பொலிஸ் பாதுகாப்பில் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...