விமான நிலையத்திற்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பாடசாலை மாணவன்!

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில், பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அழைப்பு விடுத்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவர் நேற்று (25) BIA அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்து வெடிகுண்டு இருப்பதாகக்  கூறியுள்ளார்.

அதிகாரிகள் முனையத்தை சோதனை செய்தபோது, ​​சில நிமிடங்களில் மாணவர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் இல்லை என்றும் அது நகைச்சுவை என்றும் தெரிவித்தார்.

களுபோவில பிரதேசத்தில் வசிக்கும்  பாடசாலை மாணவனை வரவழைத்த பொலிஸார், பின்விளைவுகளை உணராமல்  அழைப்பு குறித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதனையடுத்து குறித்த மாணவனை  கடுமையாக கண்டித்து, தான் செய்த செயலின் தீவிரம் தனக்கு தெரியவில்லை என பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...