விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மஹிந்தானந்த: விசாரணைகள் ஆரம்பம்

Date:

வெளிநாட்டு பயணம் ஒன்றிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவை மீண்டும் திருப்பி அனுப்பியமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டு தரவுகளுடன் தொடர்புடைய வேறு ஒருவரின் தரவுகள் உள்ளடக்கப்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தகவல்களை கணினியில் உள்ளீடு செய்த அதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் பிரிவு என்பன விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...