‘IMF நிபந்தனைகளை விரைவில் நிறைவேற்றவில்லை எனில் இரண்டாவது கடன் கிடைக்காது’

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நிதியுதவி கிடைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நிவாரணம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடுத்த பகுதி மிகவும் கடினமானது எனவும் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் இரண்டாம் தவணை தொகை கிடைக்காது எனவும் அதனால் தான் கடனை பகுதிகளாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...