‘IMF நிபந்தனைகளை விரைவில் நிறைவேற்றவில்லை எனில் இரண்டாவது கடன் கிடைக்காது’

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நிதியுதவி கிடைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நிவாரணம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடுத்த பகுதி மிகவும் கடினமானது எனவும் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் இரண்டாம் தவணை தொகை கிடைக்காது எனவும் அதனால் தான் கடனை பகுதிகளாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...