IMF மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை மருத்துவ சேவைக்கு வழங்க வேண்டும்: மருத்துவர்கள் சங்கம்

Date:

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தில் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, மருந்து தட்டுப்பாடு, மருந்து விநியோகம், ஆய்வக விநியோகம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சங்கத்தின் தலைவர் நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

சுகாதார அமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட சமூக நலப் பணிகளை முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது.

மேலும், உலக வங்கி மற்றும் பிற கடன் உதவி வழங்குநர்களிடமிருந்து விரைவான கடன் உதவியாக மேலும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை இப்போது பெற எதிர்பார்க்கிறது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...