‘IMF நிபந்தனைகளை விரைவில் நிறைவேற்றவில்லை எனில் இரண்டாவது கடன் கிடைக்காது’

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நிதியுதவி கிடைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நிவாரணம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடுத்த பகுதி மிகவும் கடினமானது எனவும் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் இரண்டாம் தவணை தொகை கிடைக்காது எனவும் அதனால் தான் கடனை பகுதிகளாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...