இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும்: கெஹலிய

Date:

இலங்கையில் இன்னும் இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறையாக இருந்த 151 மருந்துகளில் 81 மருந்துகளை கடந்த வியாழக்கிழமைக்குள் கொள்வனவு செய்ய முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான நிதியை ஒதுக்கிய பிறகு  செலவீனங்களைப் பொறுத்தவரை நிதி அமைச்சு சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளித்துள்ளது, என்று அவர் கூறினார்.

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படுவதில் எந்த உண்மையும் இல்லை, ஏனெனில் அனைத்து அவசர அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதே நேரத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சைகள் போன்ற அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...