சீன அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பொலிஸ் சீருடை துணி உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீய் ஷன்ஹொங் ஜனாதிபதி முன்னிலையில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கையளித்தார்.