உக்ரைனுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும்: ஜப்பான் பிரதமர் தெரிவிப்பு!

Date:

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீர் விஜயமாக உக்ரைனுக்கு சென்றுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை ஆயுத விநியோகம், பொருளாதார ஆதரவு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

மேலும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி திட்டம் ஒன்றை சீனா அண்மையில் வெளியிட்டது.

மேலும், இந்த அமைதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன ஜனாதிபதி ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்யா சென்றார்.

இந்த பயணத்தில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதினை ஜின்பிங் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜின்பிங் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று திடீர் பயணமாக உக்ரைனுக்கு சென்றார்.

அரச முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த புமியோ கிஷிடா பிரதமர் மோடியை சந்தித்து பேசிய சில மணி நேரங்களுக்கு பின்னர் உக்ரைனுக்கு சென்றுள்ளார்.

விமானம் மூலம் போலந்து சென்றடைந்த அவர், ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். அங்கு அவரை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வரவேற்றார்.

தொடர்ந்து இருவரும் போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜெலன்ஸ்கியிடம் புமியோ கிஷிடா உறுதி அளித்துள்ளார்.

ஜப்பான் உக்ரைனுக்கு இதுவரை 7 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.57 ஆயிரம் கோடி) மதிப்பிலான இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...