ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையால் சாதிக்கப்போவது என்ன?:ஜனாதிபதி

Date:

வரியை நீக்கியமையால் தான் நாடு வங்குரோத்து அடைந்தது என்றும் ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் சாதிக்கப்போவது என்ன? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் (01) தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இதன்போது, வரியை நீக்கி நாடு நெருக்கடியில் விழுந்ததுடன் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தான் இன்று மீண்டும் வரியை விதித்துள்ளோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சில தொழிற்சங்கங்கள் சிக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், வங்குரோத்து அடைந்துள்ள எமது நாடு மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகின்ற நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை எதற்கென்று குறித்த தொழிற்சங்கங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நீங்கள் சாதிக்கப்போவது என்ன? மின் கட்டணத்தில் அதிகரிப்பை மேற்கொள்ளாமல் மின் விநியோகத்தைச் சீராக மேற்கொள்ள முடியாது. தற்போதைய நிலைமையில் ஓரிரு மாதங்களுக்கு விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது.

எல்லாவற்றுக்கும் சர்வதேசத்திடம் நாம் கையேந்தி நிற்க முடியாது. நாம் மெல்ல மெல்லச் சொந்தக் காலில் நிற்கப் பழகிக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...