கலைஞர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உட்பட 266 எம்.பி.க்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர்!

Date:

ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளது.

120 எம்.பி.க்கள் இறந்துவிட்டதால், அவர்களது மனைவிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில்  அண்மையில் அறிக்கையொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக வருடாந்தம் 15 கோடி ரூபா செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய 15 முன்னாள் பெண் எம்.பி.க்கள் ஓய்வூதியம் பெறுகின்றார்கள்.

ஜனதா விமுக்தி பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள் இருபத்திமூன்று பேர் ஓய்வூதியம் பெறுவதுடன்,  குறித்த அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றிய ஐவர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

கலைஞர்களான மாலனி பொன்சேகா, ஜீவன் குமாரதுங்க, உபேக்ஷா ஸ்வர்ணமாலி மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரும் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

மேலும் இரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஓய்வூதியம் பெறுகின்றனர் அவர்கள் அர்ஜுன ரணதுங்க மற்றும் சனத் ஜெயசூரிய.

அதுமட்டுமின்றி அரசியல், சமயம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறிஞரும், தொடர்பாளருமான  ஜே.ஆர்.பி.சூரியப்பெரும முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றியதுடன் ஓய்வூதியமும் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக, உறுப்பினரின் ஓய்வூதியம், நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கான 18095 தொகையுடன் மற்றொரு கொடுப்பனவான 25000ஐ சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெறும் ஓய்வூதியம் 43095 ரூபாவாகும்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...