காற்றாலை திட்டங்களின் மின்னுற்பத்தி திறனை அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

Date:

இலங்கையில் 340 மெகாவோட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அங்கீகரிக்கப்பட்ட மின்னுற்பத்தி திறனை 500 மெகாவோட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க கடந்த வெள்ளிக்கிழமை (10) அதானி குழுமத்துக்கு தெரிவித்தார்.

அதானி குழுமம் அதன் சொந்த 5.2 மெகாவோட் விசையாழிகளை நாட்டுக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் முன்மாதிரி குஜராத்தின் முந்த்ராவில் ஒரு வருடமாக இயங்குகிறது. ஜெர்மனியின் W2E (Wind to Energy) GmbH தொழில்நுட்பத்துடன் இந்த இயந்திரத்தை அதானி குழுமம் உருவாக்கியுள்ளது.

இலங்கையில் சில இடங்களில் காற்றின் வேகம் 75 mps ஆக பெரிய காற்றாலை ஆற்றலைக் கொண்டுள்ளது. தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) மதிப்பீட்டின்படி, அமெரிக்கா பல வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு 45 கிகாவோட்களை வழங்குவதற்காக கடல்கடந்த காற்றாலை ஆற்றலை அமைத்தது.

நவீன இயந்திரங்களின் அடிப்படையில் இப்போது மதிப்பீடு செய்யப்பட்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் அனுராதபுரத்தில் இருந்து மதுரை வரை செல்லக்கூடிய மின்சாரம் கடத்தும் பாதை திட்டம் ஒன்றை நிர்மாணிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

இலங்கையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவும் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...