மேல், மத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், தேசிய மனநல சிறுநீரக சிகிச்சைப் பிரிவுகள், இராணுவ மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள அவசர சேவைகள் உட்பட இந்த மாகாணங்களில் உள்ள சிறப்பு மருத்துவமனைகள் தொழிற்சங்க நடவடிக்கையால் பாதிக்கப்படாது என்று GMOA செயலாளர் ஹரித அலுத்கே உறுதியளித்தார்.