நல்லிணக்க அடிப்படையில் சீனத் தூதரகத்தால் ஏழை முஸ்லிம்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

Date:

இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் நல்லிணக்க முறையில் ஏழை முஸ்லிம்களுக்கு சுமார் 600 உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

இதனை விநியோகிக்கும் நிகழ்வு  நேற்று கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

Faxian அறக்கட்டளைத் திட்டத்தின் கீழ், ஏழு சீனக் கோயில்கள் மற்றும் பக்தர்களிடமிருந்து 50,000 பெட்டிகள் உலர் உணவுகள் பொதிகள், அனைத்து சமூகங்களைச் சேர்ந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவிக்கையில்,

கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Faxian தொண்டு திட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன், இது ஏழு சீன கோவில்கள் மற்றும் பக்தர்களிடமிருந்து இலங்கையிலுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இந்த உலர் உணவுப் பொதிகள் கிடைக்கபெற்றுள்ளன என தெரிவித்தார் .

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சருடன் பங்குபற்றிய சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனாவில் இருந்து பௌத்தர்கள் மற்றும் ஆலயங்களில் இருந்து இந்த நன்கொடைகள் இலங்கை நாட்டில் உள்ள தகுதியான மக்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தகுதியான குடும்பங்களுக்கு சுமார் 600 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் ரிஸான் ஹுசைன் தெரிவித்தார்.

இப் பொதிகள் பிற சமூகத்தினரிடையேயும் உரிய காலத்தில் விநியோகிக்கப்படும். “இது ரமலான் நேரம் என்பதால், முஸ்லிம்கள் முதல் பயனாளிகள் ஆனார்கள் என்று கூறினார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...