நிதி இல்லை என்றாலும் தேர்தலை நடத்த வேண்டும்: பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

Date:

அரசாங்கம் நிதி இல்லை என்று கூறிய போதிலும் இரு மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிதி அமைச்சு தேர்தலுக்கு நிதி வழங்காத நிலையிலும் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடாத சூழலிலும் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக திகதியை அறிவித்தார்.

இருப்பினும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் ஜனாதிபதியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்கள் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டனர்.

இரண்டு மாகாண தேர்தல்களுக்கும் 15 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் தேவை என்று பாகிஸ்தான் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலை தடுக்க நிர்வாக, சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நாட்டின் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நாட்டின் பொதுத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...