நுரைச்சோலைக்கான நிலக்கரியை கொள்வனவு செய்ய புதிதாக விலைமனு கோரப்படவுள்ளது

Date:

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு 2023/2024 காலப்பகுதிக்கு தேவையான 2.25 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை அரசாங்க கொள்முதல் செயல்முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு புதிய விலைமனு கோருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2023/2024 காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரியை பாதுகாப்பதற்காக கொள்முதல் செயல்முறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவையின் ஒப்புதலை கோரியிருந்தார்.

முன்னதாக, 2022-2025 காலகட்டத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி விலைமனுவை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏனெனில் விலைமனுவை பெற்ற நிறுவனம் பதிவு செய்யப்படாத நிறுவனம் என பின்னர் தெரிய வந்தது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...