பங்களாதேஷில் பயங்கர விபத்து: பேருந்து கவிழ்ந்து 19 பேர் பலி!

Date:

பங்களாதேஷில் வேகமாகச் சென்ற பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் காயமடைந்தனர்.

பங்களாதேஷ் மாநிலம் டாக்காவை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று , மதரிபூரில் உள்ள ஒரு விரைவுச் சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் எனவும் அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்கள்.  மேலும், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் அவர்கள் தெரிவித்தனர்.

மோசமான பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் காரணமாக பங்களாதேஷில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.பங்களாதேஷில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 9,951 பேர் உயிரிழந்துள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...