‘பஸ் உதிரி பாகங்களின் விலைக் குறைப்பு தொடர்பில் ஆராய முடியாவிட்டால், போக்குவரத்து அமைச்சர் பதவி விலக வேண்டும்’

Date:

 பஸ் உதிரி பாகங்களின் விலைக் குறைப்பு மற்றும் சேவைக் கட்டணங்களை ஆராய முடியாவிட்டால், போக்குவரத்து அமைச்சர்  பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.

அதேநேரம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் தனியான குழுவொன்றை நியமிக்கவோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் (NTC) கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவோ முடியாவிட்டால், அவர் பதவி விலக வேண்டும் எனவும், பிரச்சினைகளை கவனிக்க வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் 1 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தத்திற்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருளின் விலையில் பெரும் வீழ்ச்சியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பரிசீலித்து வருவதாகவும், இந்த கோரிக்கை குறித்து மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், பஸ் கட்டணத்தை குறைப்பதன் மூலம் அந்த நன்மையை மக்களுக்கும் வழங்க முடியும்.

அமெரிக்க டொலரின் மதிப்பு குறைவது, உதிரி பாகங்களின் விலையை நேரடியாக பாதிக்கும். ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் திகதி பஸ் கட்டண திருத்தம் நடைபெறும்.

ஆனால் ஏப்ரல் 1 ஆம் திகதி எரிபொருள் விலை குறையும் பட்சத்தில் மக்களுக்கான பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

35000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் நாட்டிற்கு

35000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய கப்பலொன்று இன்று...

35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்: ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால் போராட்டம்

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் மேலாண்மை அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட எரிபொருள்...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும்...

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...